RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

BIG STORIES

ஓட்டுநருக்கு மாரடைப்பு.. 30 பேரின் உயிரைக் காத்த நடத்துனரின் கரங்கள்..! சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி..

May 24, 2025 01:32 AM

742

ஓட்டுநருக்கு மாரடைப்பு.. 30 பேரின் உயிரைக் காத்த நடத்துனரின் கரங்கள்..! சினிமாவை மிஞ்சும் பரபரப்பு காட்சி..

பழனி அருகே தனியார் பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்டு நடத்துனர் பேருந்தை நிறுத்திய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பழனியில் இருந்து காலை 11 மணி அளவில் சத்திரப்பட்டி புதுக்கோட்டைக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி வந்த நிலையில், நடத்துனராக விமல் குமார் இருந்துள்ளார்.

பேருந்து சிந்தலவாடம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்த பொழுது , பேருந்தை நிறுத்துமாறு நடத்துனர் விமல் குமார் விசில் அடித்தார்.

ஸ்டாப்பில் பேருந்தை நிறுத்த முயற்சித்த போது, நெஞ்சு வலிக்கின்றது என்று கூறிய ஓட்டுனர் பிரபு திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு இருக்கையில் இருந்து சரிந்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து அங்குள்ள நிறுத்தத்தில் நிற்காமல் சாலையில் வேகமாக சென்றது, உடனடியாக விரைந்து வந்த நடத்துனர் ஓட்டுனரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு, கீழே குனிந்து தனது கைகளால் பிரேக் அழுத்தி பேருந்தை நிறுத்தினார்.

அருகில் இருந்தவர்களை அழைத்து ஓட்டுனருக்கு வலிப்பு வந்ததாக நினைத்து இரும்பு ராடு ஒன்றை கையில் கொடுத்தார் ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுனர் பிரபு அந்த இடத்திலேயே ஸ்டியரிங்கில் சாய்ந்து மரணம் அடைந்தார்.

பேருந்து ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில் நடத்துனர் விமல் குமார் சமயோசிதமாக சிந்தித்து, உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட தாக ப் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை போல நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies