RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

BIG STORIES

“மாமா...மாமா” ஆசையாக விளையாட வந்த பெண் குழந்தை.. தலையை துண்டித்து தெருவில் எடுத்துக்கொண்டு ஓடிய மாமன்!

May 23, 2025 12:50 PM

552

மாமா... மாமா... என ஆசையாக விளையாட ஓடிவந்த இரண்டரை வயது பெண் குழந்தை...துடிக்க துடிக்க தலையை துண்டித்து... தெருவில் எடுத்துக்கொண்டு ஓடிய மாமன்... கதறியபடி ஓடிவந்த உறவினர்கள்... தமிழ்நாட்டை உலுக்கிய அடுத்த அதிர்ச்சி... பதைபதைக்க வைக்கும் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

செங்கல்பட்டு டோல்கேட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி லோடு ஏற்றப்பட்ட 16 வீல் டாரஸ் லாரியை கடத்திச்சென்று, போலீசுக்கே தண்ணி காட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்தது.

அதுவும், போலீஸ் மறித்தும் நிற்காமல், உதவி ஆய்வாளர் தொங்கியபடி சென்றும், அடங்க மறுத்து லாரியை ஏதோ சைக்கிள் போல, 15 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற வீடியோ காட்சி வெளியாகி, பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இறுதியாக, மறைமலை நகர் சிக்னலில் சாலை தடுப்பு சுவற்றில் ஏற்றி லாரியை நிறுத்தினார். அதன் பின்னரும், அடங்காமல் கையில் கம்பியுடன் போலீசாரை அடிக்க பாய்ந்தார். பலரும் அவர் மீது ஆத்திரம் கொண்டு லாரிக்குள் ஏறி அவரை தாக்கி இழுத்து சாலையில் போட்டனர்.

போலீசார் தடுக்கவில்லை என்றால், அவரை சாலையில் இழுத்துப்போட்டே அடித்து நொறுக்கி இருப்பார்கள். அப்போது அவரோ, ஏதோ அம்மாவிடம் அடிவாங்கிய குழந்தை போல், சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

விசாரணையில் அவர் நெல்லையைச் சேர்ந்த சுபாஷ் என்பதும் சுங்கச்சாவடி பகுதிகளில் சுற்றித்திரிந்த அவர், திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்த போலீசார், அவரை கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட சுபாஷ், ரயில் நிலையத்தில் உள்ள பிளாட் பார கடையில் சூடான பாலை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்க மறுத்து கடைக்கார பெண்ணின் மீது ஊற்றிவிட்டு ஓட்டம்பிடித்த வீடியோ, கோயம்பேட்டில் உள்ள செல்போன் கடை ஒன்றில் கடை ஊழியர் மீது சேரை தூக்கி வீசி தாக்கி, ரகளையில் ஈடுபட்ட வீடியோ, மூடப்பட்ட ஷட்டரை கையால் அடித்து உடைக்கும் வீடியோ என அடுத்தடுத்து அவரது பல அட்ராசிட்டி வீடியோக்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, சுபாஷை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த தேசிங்கு ராஜா - டெய்சி தம்பதியர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் 2 1/2 வயது மகள் லெமோரியா, அவரது மாமா அதாவது தேசிங்கு ராஜாவின் சகோதரி மகன் சஞ்சயுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

மாமா... மாமா... ஆசையாய் விளையாடிக்கொண்டிருந்த லெமோரியாவை, 25 வயதுள்ள மாமன் சஞ்சய், திடீரென இழுத்துச் சென்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் வைத்து, கழுத்தை கத்தியால் அறுத்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்தவர்கள், பதறிப்போய் கூச்சலிட, தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு தெருவில் ஓட ஆரம்பித்துள்ளார், சஞ்சய்.

இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சஞ்சையை துரத்த, ஐந்து, ஆறு தெருக்களுக்கு மேல் தலையை எடுத்துக்கொண்டு ஓடி, அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

நெற்றியில் மட்டுமல்ல, கன்னங்களிலும் இரண்டு மை பொட்டுகளை வைத்துக்கொண்டு, தனது மாமா தானே என்ற நம்பிக்கையோடு, விளையாடிக்கிறது அந்த குழந்தை.

இப்படிப்பட்ட குழந்தையை கிள்ளக்கூட மனம் வராது. அப்படியிருக்க, கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டு ஓடி, குளத்தில் வீச எப்படி மனம் வந்தது? என அழுது துடித்துக்கொண்டிருக்கிறார்கள், குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும்!

இக்கோடூர சம்பவம் குறித்து, எமனேஸ்வரம் காவல்துறையினர் சம்பவம் இடத்தில் உள்ள குழந்தை உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய சஞ்சையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், 25 வயது சஞ்சய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டுவந்தவர் எனவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பிறகே இது வெறும் கொலையா? அல்லது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என்கிற போலீஸார், சஞ்சய் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா? அதனால்தான், இப்படிப்பட்ட கொடூர செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

அதேநேரத்தில், மனநலம் பாதிக்கப்படுகிறவர்களைவிட மனநலம் பாதிக்கப்படாமல் நார்மலாக இருப்பவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலே குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்கிற எண்ணம் தவறானது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முறையான சிகிச்சை அளிக்கவேண்டுமே தவிர, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் குற்றவாளிகள்போல் பார்க்கக்கூடாது என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies