RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

BIG STORIES

கழட்டி விட்ட பொண்ணு.. மாணவனை கடத்தி கொலை செய்த நண்பர்கள்..! காதல் போட்டியால் விபரீதம்..

May 16, 2025 02:22 AM

591

கழட்டி விட்ட பொண்ணு.. மாணவனை கடத்தி கொலை செய்த நண்பர்கள்..! காதல் போட்டியால் விபரீதம்..

கழட்டி விட்ட பொண்ணு.. மாணவனை கடத்தி கொலை செய்த நண்பர்கள்..! காதல் போட்டியால் விபரீதம்..

கல்லூரி படிக்கிற வயதில் காதலை கடந்து செல்லாதவர்கள் இருக்க முடியாது ...என்று சொல்லும் அளவுக்கு இன்றைய இளையதலைமுறையினரின் பழக்க வழக்கம் ஆன்லைனில் அதிகமாக உள்ளது.

90 களில் சொல்லப்பட்ட காதல்களை விட சொல்லப்படாத..காதல்கள் ஏராளம். அதில் பார்வைகள் சந்தித்துக் கொண்டாலும், சொல்ல அஞ்சி மனதிற்குள் புதைந்து போன ஒரு தலைக்காதல்கள் தான் அதிகம் என்று கூட சொல்லலாம்.

இப்போது எல்லாம் அப்படி இல்லை , அழகான பெண் என்றால் அந்த பெண்ணை காதலிக்க போட்டா போட்டி தான்.. அதுவும் அந்த பெண் பேசி விட்டு சென்றாளே தன்னை காதலிப்பதாக நினைத்து உருகும் ரோமியோக்கள் பலர் இங்குண்டு.

இந்த நிலையில் தான் தன்னிடம் வீடியோ காலில் பேசும் அளவுக்கு பழகிய சக மாணவி ஒருவர் தன்னை விட்டு வேறு ஒரு மாணவருடன் பழக ஆரம்பித்ததை தாக்கிக் கொள்ள இயலாமல் கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயர் கல்விக்கு பெயர் பெற்ற கோவையில் நடந்திருப்பது தான் இங்கே பலரை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.

கடந்த 11 தேதி காலை.... கோவை, அடுத்த வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு முன்பு உள்ள காலி இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். யாரோ அந்த சடலத்தை காரில் கொண்டு வந்து வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர் .

4 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? உடலை இங்கு கொண்டு வந்து வீசியவர்கள் யார் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா என்பது தெரிய வந்தது.

மாணவர் சூர்யாவின் சட்டைப்பையில் இருந்த துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார் மாதேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

முதலில் தனக்கு தெரியாது என்று மாதேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போலீசார் , சூர்யா கடைசியாக மாதேஷுடன் பேசியதை உறுதி செய்தனர்.

தனியார் கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திய மாதேஷ் கார் கன்சல்டிங் தொழில் செய்து வரும் நிலையில் எதற்காக கல்லூரி மாணவரை கொலை செய்தார் என்று விசாரித்த போது நட்புக்காக செய்த கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

மதேஷின் நண்பன் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை பூர்வீகமாக கொண்ட கார்த்திக், இவன் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தான். இவனுடன் அதே கல்லூரியில் படிக்கின்ற மாணவி ஒருவர் பழகி வந்துள்ளார்.

செல்போனில் வீடியோ கால் பேசும் அளவுக்கு இவர்களது பழக்கம் வளர்ந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திக்கின் நடவடிக்கை பிடிக்காத்தால் அவருடன் பேசுவதை அந்த மாணவி நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதற்க்கிடையே அந்த பெண் புதிதாக மாணவர் சூர்யாவுடன் பழகி வந்தது தெரிய வந்தது. சூர்யாவின் செல்போனில் அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய வீடியோக்கள் இருப்பதை பார்த்து, தான் காதலிக்கும் பெண்ணையே சூர்யாவும் காதலிப்பதாக நினைத்து கார்த்திக் ஆத்திரம் கொண்டுள்ளான்.

தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் சூர்யாவை தீர்த்து கட்டிவிட்டால் அந்த பெண் தன்னை மீண்டும் தேடி வரும் என்று நினைத்து கூட்டாளிகள் மாதேஷ், நரேன் கார்த்திக், ஆட்டோ ஓட்டுனர் முகமது ரபி ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளான்.

சூர்யா செமஸ்டர் விடுமுறைக்கு சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருந்த நிலையில், அவருடன் ஏற்கனவே பழக்கமான மாதேஷை வைத்து பேசி பார்ட்டி பன்னலாம் என்று கோவைக்கு வரவழைத்துள்ளனர்.

சம்பவத்தன்று கோவை ஆறுமுக கவுண்டனூரில் மாதேஷ் தங்கி இருந்த அறைக்கு சூர்யா சென்றுள்ளார். அங்கு வைத்து சூர்யாவை மூக்கு முட்ட மது அருந்த செய்துள்ளார். மது போதையில் இருந்தபோது திட்டமிட்டப்படி அறைக்குள் வந்த கார்த்திக் , முகமது ரபி, நரேன் கார்த்திக் ஆகியோர் போதையேற்றும் மயக்க ஊசி போட்டு சூர்யாவை மூர்ச்சையாக்கி உள்ளனர்.

மயக்கமடைந்த நிலையில் கிடந்த சூர்யாவின் கைகால்களை கட்டிப்போட்டு தலையனையால் முகத்தில் அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்கு மூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

ஒரு நாள் முழுவதும் சூர்யாவின் சடலத்தை அந்த அறைக்குள் போர்வை போட்டு மூடி வைத்துள்ளனர். அதிகாலையில் சடலத்தை வெள்ளலூர் குப்பை கிடங்கில் வீசுவதற்காக காரில் தூக்கிச்சென்றுள்ளனர்.

அதற்குள்ளாக விடிந்து விட்டதால் புதிய பேருந்து நிலைய கட்டிடத்தின் அருகிலேயே சூர்யாவின் சடலத்தை தூக்கி போட்டு விட்டு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

நரேன் கார்த்திக்கின் தந்தை மெடிக்கல் வைத்திருப்பதால் அங்கிருந்து போதையுடன் மயக்கம் தரும் ஊசி மருந்தை எடுத்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்தவகை மருந்துகளை இளசுகள் பலர் போதைக்காக பயன்படுத்துவார்கள் என்றும் அந்த மருந்து உடலில் போதை ஏற்றி மயக்கத்திலேயே வைத்திருக்கும் என்றும் கொலை செய்யும் போது சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்படி செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து மாணவர் சூர்யா கொலை சம்பவம் தொடர்பாக பழகிக் கெடுத்த மாணவர்கள் கார்த்திக் , நரேன் கார்த்திக், மற்றும் மாதேஷ், முகமது ரபிக் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த பெண் விட்டுச்சென்றால்.. இதைவிட நம்மை நன்றாக புரிந்த இன்னொரு பெண் வாழ்க்கையில் வருவார் என்ற நம்பிக்கையுடன் காதலை கடந்து செல்வது புத்திசாலித்தனம்.

அதை விடுத்து தன்னை காதலிக்கும் பெண் ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்தால் அதனை துரோகம் என்பதோ, அந்த பெண்ணை தூற்றுவதோ தேவையில்லாத வேலை.

சிலர் மன நிலை முற்றிய நிலையில் அந்த பெண்ணை தாக்குவது, ஆசிட் வீசுவது, கொலை செய்வது அல்லது தன் காதல் பிரேக அப் ஆவதற்கு இவர் தான் காரணம் என்று மற்றவர்களை காயப்படுத்துவது , கொலை செய்வது இவை எல்லாம் பெருங்குற்றம்.

காதலில் விழுந்து காயம்பட்ட அவசர புத்தி கல்லூரி மாணவரால், அவரது நண்பர்கள் 3 பேரும் மாணவர் சூர்யாவை கொலை செய்த வழக்கில் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காதலுக்காக செய்தாலும்... நட்புக்காக செய்தாலும்.. குற்றம் கேடு தரும்..!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies