தமிழ்நாடு
காவலர் தாய் கொலை 'ஸ்பைடர் உமன்' சிக்கியது எப்படி ? வெளியான திகில் தகவல்
Apr 16, 2025 01:06 AM
357
காவலர் தாய் கொலை 'ஸ்பைடர் உமன்' சிக்கியது எப்படி ? வெளியான திகில் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்ததாக 24 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர் விக்ராந்த். இவரது தாய் வசந்தா தேரிப்பனையில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்த வீட்டின் உள்ளே கட்டிலில் வசந்தா மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். வசந்தா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியும், கம்மல்களும் கொள்ளயடிக்கப்பட்டு இருந்தது.
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெண் ஒருவர் வசந்தாவின் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது.
செல்வரதி என்ற 24 வயது பெண்ணை பிடித்து விசாரித்த போது வசந்தா கொலைக்காண மர்மம் விலகியது. செல்வரதி தனது கணவரின் சொந்த ஊரான மீரான்குளத்தில் வசித்து வந்தார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்ததற்காக செல்வரதி சொந்த ஊரான தேரிப்பனைக்கு வந்துள்ளார்.
எப்போது கழுத்தில் தங்க சங்கிலியுடன் வலம் வந்த வசந்தாவை கண்டதும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
வழக்கமாக மதிய உணவுக்கு பின்னர் வீட்டில் ஜன்னல் மற்றும் வாசல் கதவை காற்றுக்காக திறந்து போட்டபடி வீட்டிற்குள் படுத்து உறங்குவதை வசந்தா வாடிக்கையாக வைத்திருப்பதை அறிந்து வைத்திருந்தார் செல்வரதி. திங்கட்கிழமை மதியம் தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். முன்பக்க கதவு மற்றும் ஜன்னலை அடைத்து விட்டு அருகே இருந்த கட்டிலில் படுத்து கிடந்த வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்ததும், அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியையும், இரு தங்க கம்மலையும் திருடி கொண்டு தப்பிச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கணவரின் சொந்த ஊரான மீரான்குளத்தில் பதுங்கி இருந்த செல்வரதியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகள் மீட்பட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே செல்வ ரதி கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருடி சிக்கி உள்ளார்.
அந்த மூதாட்டி அந்த கிராமத்தில் உள்ள அனைவரது வீட்டிற்கும் சென்று செல்வரதி தனது வீட்டில் பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வரதி, ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் எஸ்.ஜே சூர்யா போல , ஒரு விதமான சைக்கோவாக மாறி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் பேரனை கடத்திச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
செல்வரதி மீது கொலை கொள்ளை வழக்கு மட்டுமில்லாமல், வெளி மாவட்டங்களிலும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கிராமங்களில் தனியாக வசிக்கின்ற மூதாட்டிகள் கூடுமானவரை நகைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது, நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், குடும்ப பெருமைக்காக என்று கழுத்தில் அணிகின்ற நகைகளே விபரீத செயல்கள் நிகழ காரணமாகிவிடும் என்றும் வீட்டின் கதவுகளை எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu