RECENT NEWS

Teens-களின் பெற்றோர்களே உஷார்!... தற்கொலைக்கு தூண்டும் Phone Addiction

Teens-களின் பெற்றோர்களே உஷார்!... தற்கொலைக்கு தூண்டும் Phone Addiction

Mar 25, 2025

Teens-களின் பெற்றோர்களே உஷார்!... தற்கொலைக்கு தூண்டும் Phone Addiction

Teens-களின் பெற்றோர்களே உஷார்!... தற்கொலைக்கு தூண்டும் Phone Addiction

Mar 25, 2025

முகப்பு

Ex மீது பெட்ரோல் ஊற்றி தீ.. “ஸ்கெட்ச்” 2 k காதல் பொண்ணு..! போலீசில் சிக்கியது எப்படி ?

Mar 07, 2025 12:21 PM

336

Ex மீது பெட்ரோல் ஊற்றி தீ.. “ஸ்கெட்ச்” 2 k காதல் பொண்ணு..!
போலீசில் சிக்கியது எப்படி ?

Ex மீது பெட்ரோல் ஊற்றி தீ.. “ஸ்கெட்ச்” 2 k காதல் பொண்ணு..! போலீசில் சிக்கியது எப்படி ?

கிருஷ்ணகிரி அருகே இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இளம் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் . ஆக்டிங் டிரைவரான இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர் போத்திநாயனப்பள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளையும் வளர்த்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு அங்கு சென்ற அவர், அங்குள்ள கொட்டகையில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் வீடு திரும்பாத நிலையில் , அங்கு உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

மகாராஜகடை போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். கார்த்திக்கை யாரோ தாக்கி கொன்று, தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

அப்பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ காட்சிகள் மற்றும் அப்பகுதியில் செல்போன் டவர் லோகேஷன் உள்ளிட்டவற்றை வைத்து அந்நேரத்தில் அங்கு இருந்தவர்களின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்தனர்.

அதில் கடந்த, 2ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி அடுத்த பழையூரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் மொபைலிலிருந்து, தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தை சேர்ந்த தனியார் மருந்தக பணியாளர் தினேஷ்குமார் என்பவருக்கு அடிக்கடி போன் வந்ததும், தினேஷின் மொபைல், கொலை நடந்த இடத்திற்கு அருகே வந்து சென்றதும் போலீசாருக்கு தெரிந்தது.

பெங்களூருவில் உள்ள தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்த தினேஷ், பணி தொடர்பாக அவ்வப்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரிக்கு வந்து செல்வதும் தெரிந்தது. வியாழக்கிழமை மாலை, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்த தினேஷ்குமாரை மகாராஜகடை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கான மர்மம் விலகியது .

தினேஷும், புவனேஸ்வரி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வரும் நிலையில், அதற்கு முன் புவனேஸ்வரிக்கு கார்த்திக்குடன் பழக்கம் இருந்துள்ளது.

தினேஷுடன் காதல் ஏற்பட்ட பிறகு கார்த்திக்குடன் பழகுவதை புவனேஸ்வரி நிறுத்தியுள்ளார். இருப்பினும் கார்த்திக், புவனேஸ்வரிக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னுடன் பேசாவிட்டால் நாம் பேசிய ஆடியோ மற்றும் எனக்கு அனுப்பிய ஆடையில்லா போட்டோக்களை நெட்டில் வெளியிடுவேன் என புவனேஸ்வரியை கார்த்திக் மிரட்டி உள்ளார்.

இது குறித்து புவனேஸ்வரி, தினேஷிடம் தெரிவித்துள்ளார். இதை எடுத்து கார்த்திகை கொலை செய்ய இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.

கார்த்திக்கிடம் ஆசையாக பேசிய புவனேஸ்வரி, தனிமையில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
, அதன்படி கார்த்திக்கும் கடந்த, 2ம் தேதி இரவு தன் விவசாய நிலம் உள்ள போத்திநாயனப்பள்ளி விவசாய நிலத்தில் உள்ள ஆட்டு பண்ணை வீட்டுக்கு சென்று காத்திருந்துள்ளார்.

கார்த்திகை நீண்ட நேரம் காத்திருக்க வைத்த புவனேஸ்வரி சம்பவ இடத்துக்கு செல்லவில்லை. இரவு வெகு நேரமானதால் கார்த்திக் அங்கேயே படுத்து தூங்கி உள்ளார்.

அங்கு வந்த தினேஷ், இரும்பு ராடால் கார்த்திக்கை அடித்து கொன்றதாகவும், தடயங்களை மறைக்க கொட்டகையில் இருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியதாகவும், வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திக்கை கொன்றுவிட்டு பைக்கில் திரும்பிய தினேஷ் குமார், பழையூர் ஏரிக்கரையில் இரும்பு ராடை வீசியதாகவும், கிருஷ்ணகிரி டூ வீலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு, பெங்களூருவுக்கு பேருந்தில் தப்பிச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

கொலை செய்த தினேஷ்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி புவனேஸ்வரி ஆகிய இருவரையும் மகாராஜகடை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் காதலியை மிரட்டிய exகாதலன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்?
யாரெல்லாம் டான்ஸ் ஆடக்கூடாது?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies