முகப்பு
“நீ கேட்ட கேள்வி ஒவ்வொன்னும் மண்டையில உரைக்குற மாதிரி சும்மா சுர்ன்னு இருந்திச்சிம்மா..” இந்தி திணிப்பு நோட்டீஸை வாங்க மறுத்த பெண்..
Mar 01, 2025 07:48 AM
81
சாலையில் அனுமதியின்றி பட்டாசு வெடித்தபோது நூலிலையில் உயிர் தப்பி பேருந்து நிறுத்தத்தில் பதற்றத்துடன் நின்றிருந்த பெண்ணிடம், இந்தி திணிப்பு நோட்டீஸ் கொடுத்த திமுகவினரிடம் எழுப்பப்பட்ட ஆவேச கேள்விகள் தான் இவை..!
திமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக வல்லூர் ரமேஷ் ராஜ் என்பவர் நியமிக்கப்பட்டதையொட்டி அவரது ஆதரவாளர்கள் சீத்தஞ்சேரி பகுதியில் பட்டாசு வெடித்ததால் பாதசாரிகள் பலர் அலறியடித்துக் கொண்டு ஓடினர
அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது, அங்கு கட்டப்பட்டிருந்த புரட்சி பாரதம் கட்சியின் கொடியை அகற்ற முயன்றனர். ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை கைவிட்டு கீழே இறங்கினர்
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்ப்பதாக கூறி துண்டு பிரசுரம் வினியோகித்தார் மாவட்ட செயலாளர் ரமேஷ் ராஜ், பட்டாசு வெடித்ததால் நூழிலையில் உயிர் தப்பி பதற்றத்துடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் துண்டு பிரசுரத்தை ரமேஷ்ராஜ் வழங்கினார். அதனை பெற்றுக் கொள்ள மறுத்த அந்த பெண், “உங்க ஆளுங்க பொறுப்பில்லாம சாலையில் பட்டாசு வெடிக்கிறாங்க, என் உயிர் போயிருந்தா நீங்க பொறுப்பேற்பீங்களா ? என் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது ? என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
இதனை படம் பிடிக்க கூடாது என்று அருகில் நின்ற அல்லக்கை ஒருவர் தனது உள்ளங்கையால் கேமராவை மறைத்தார்
வாலண்டியராக சென்று பெண்ணிடம் திட்டு வாங்கிய திருப்தியோடு மாவட்ட செயலாளர் ரமேஷ்ராஜ் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார
மற்றொரு தொண்டர் , எங்கள் மாவட்ட செயலாளரை எப்படி எதிர்த்து பேசலாம் என்று ஆபாசமாக பேசி அந்த பெண்ணிடம் சண்டைக்கு பாய்ந்தார், இதனை கண்டதும் அத்தப்பெண் “தான் ஒரு அரசு ஊழியர் என்றும் தன்னை பப்ளிக்காக மிரட்டுவதாக ஒரு புகார் அளித்தால் மொத்தமாக உள்ளே போய் வீடுவீர்கள்” என்று ஆவேசமாகி பத்தரகாளியாக மாறினார்
உக்கிரமாக இருந்த உடன் பிறப்புக்கள் இதனை கேட்டத்தும் தங்கள் தவறை உணர்ந்து அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இடத்தை காலி செய்தனர். பெண்ணிடம் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்தவரையும் அங்கிருந்து விரட்டி விட்டனர்
இதற்க்கிடையே புதிய மாவட்ட செயலாளரை வரவேற்க இரு அணிகளாக திரண்டிருந்த தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu