RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

முகப்பு

மண் லாரியால் சிக்கிய 7 ஆம் வகுப்பு மாணவி கால் சிதைந்த சோகம்..! பள்ளி நேரத்தில் தடையின்றி இயக்கம்

Jul 17, 2025 01:24 AM

243

மண் லாரியால் சிக்கிய 7 ஆம் வகுப்பு மாணவி கால் சிதைந்த சோகம்..! பள்ளி நேரத்தில் தடையின்றி இயக்கம்

பள்ளி அருகே தடையின்றி இயக்கப்பட்ட டாரஸ் லாரிகள்.. பள்ளி மாணவியின் ஒரு பக்க கால் சிதைந்த சோகம்


“பொம்பள புள்ள சார்.. எம்புள்ள கூட தான் சார் படிக்குது... அந்த புள்ளைக்கு முட்டிக்கு கீழெ காலே இல்லாம சிதைந்து போயிருச்சி சார்..” என்று பள்ளிக்கூடம் விடும் நேரத்தில் இயக்கப்பட்ட லாரியில் சிக்கிய மாணவிக்காக , போலீசாரிடம் புகார் தெரிவித்த ஆதங்க குரல் தான் இது..!

ஆவடி அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் பாபு, இவரது மகள் ரக்சனா, பட்டூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளீக்கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். செவ்வாய் கிழமை மாலை 4 :30 மணியளவில் பள்ளி முடிந்து தனது தந்தையின் இரு சக்கரவாகனத்தில் சிறுமி ரக்சனா சென்றார். சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவை கடக்க முயன்ற போது அந்த வழியாக விதிகளை மீறி இயக்கப்பட்ட டாரஸ் லாரி ஒன்று இருசக்கரவாகனத்தின் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி பைக்குடன் பாபுவும் அவரது மகளும் சாலையில் விழுந்தனர்.

சிறுமியின் இடது கால் மீது அந்த லாரியின் பின் பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் அவரது முட்டிக்கு கீழ் கால் முழுவதுமாக கால் சிதந்து போனதாக நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் ஆதங்கம் தெரிவித்தனர்.

பலத்த காயம் அடைந்த மாணவி ரக்சனாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் விதமாக தடையின்றி கனரக வாகனங்கள் இயக்கப்படுவதாக மாணவ மாணவிகளின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

போக்குவரத்து போலீசார் முறையாக அங்கு பணியில் இருந்திருந்தால், பள்ளிவிடும் நேரத்தில் கனரக வாகனங்கள் வந்திருக்காது என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்

“கட்டுமான பணிகள் நடக்கின்ற இடம் என்றால் கனரக வாகனங்கள் வரத்தான் செய்யும் அதனை தடுக்க இயலாது” என்று கையை விரித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், பள்ளி நிர்வாகத்தை வேறு வழியில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்கள் என்று விதி மீறிய லாரிக்கு ஆதரவாகவே பேசினார்

விபத்தை ஏற்படுத்திய கனரக லாரி கண்ணுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது ? என்பதே தெரியாதது போல பேசிய காவல்ஆய்வாளர் ஜெயக்குமார், காவல்துறையில் போதிய காவலர்கள் இல்லை என்றும் அதனால் லாரிகளை தடுப்பது இயலாத காரியம் என்றும் கூறியதால், தாங்கள் நாளை ஸ்ட்ரைக்கில் ஈடுபடபோவதாக பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்

விபத்தை ஏற்படுத்திய லாரி பிரபல அரசியல் கட்சி தலைவருக்கு சொந்தமானது என்று கூறப்படுவதால் தடையின்றி இயக்கப்படும் அந்த லாரிகள் மீதும் உரிமையாளர் மீதும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்

சென்னை மாநகர காவல்துறை பள்ளிக்கூட நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளது. அதே போல ஆவடி மாநகர காவல்துறை எல்லையிலும் பள்ளி நேரங்களில் காலையும் மாலையும் கனரக வாகனங்களுக்கு நிரந்தர தடை விதிப்பதோடு, போக்குவரத்து காவலர்களை நிறுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies