மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
முகப்பு
வீட்டிற்குள்ளே 5 அடி குழி கணவனை கொன்று புதைத்து ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய பெண்.!
Jul 17, 2025 05:42 AM
347
வீட்டிற்குள்ளே கொன்று புதைக்கப்பட்ட கணவன்.. ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய பெண்
”உன்னை இங்கேயே குழித் தோண்டி புதைச்சிடுவேன்” அப்படி என்று நம்மில் பலரும் கோபத்தில் இந்த வார்த்தை பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் நிஜத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடத்திருக்கிறது. பெண் ஒருவர் தனது கணவரை கொலை செய்து வீட்டிக்குள்ளே புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமா கதுன்(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது . அப்படி ஒரு நாள், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ரஹிமா, தனது கணவர் ரஹ்மானை கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
தனது கணவரை கொலை செய்தததை மறைக்க நாடகமாடிய ரஹிமா, தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றிருக்கிறார் என்றெல்லாம் சொல்லி சமாளித்துள்ளார். ஆனால், இவரது மகனுக்கு லேசாக சந்தேகம் எழுவதை அறிந்துகொண்ட ரஹிமா, உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், இறந்த ரஹ்மானின் சகோதரர் ஜூலை 12 ஆம் தேதி ரஹிமா காணாமல் போனது குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளார். போலீஸாரும் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இதனால் பயந்துபோன ரஹிமா, ஜூலை 13 ஆம் தேதி, குவஹாத்தியில் உள்ள ஜலுக்பாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ஆரம்பத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாகக் கூறிய ரஹிமா, பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் தனது கணவரைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சம்பவதன்று இரவு, ரஹ்மானின் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது ரஹ்மானின்- ரஹிமா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சண்டையில், ரஹிமா தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரது கணவர் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இந்த நிலையில், ரஹ்மானின் உடல் எங்கே? இருக்கிறது என கேட்ட போலீசாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ரஹிமா, தனது இறந்த கணவரின் உடலை மறைப்பதற்காக வீட்டிலே 5 அடியில், குழியை தோண்டி உடலை அதில் புதைத்து மண்ணால் மூடி மறைத்துள்ளார். அதைத்தொடர்ந்து ரஹிமாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு சிதைந்த ரஹ்மானின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிச்சோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், ஒரு பெண் மட்டும் இவ்வளவு பெரிய குழி தோண்டி, உடலைக் புதைப்பது என்பது சாத்தியமில்லை என சந்தேகித்த போலீசார் இதில், மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் கூறியிருகின்றனர். அதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனைவி, கணவனை கொன்று தனது வீட்டிலே குழி தோண்டி புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu