RECENT NEWS

தேர்தலில் தோற்று செத்து சாம்பலானாலும் நா.த.க. தனித்தே போட்டியிடும் - சீமான்

முகப்பு

தில்லாலங்கடி அரசியல் பிரமுகர் செய்த ரூ.1 கோடியே 80 லட்சம் நில அபகரிப்பின் பின்னணி..!

Jul 17, 2025 01:29 AM

213

38 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் மனைவி என மோசடி.. டெக்னிக்கலாக நிலத்தை அபகரித்த அரசியல் பிரமுகர்

சென்னை எழும்பூரை சேர்ந்த ராஜசேகர் - மேனகா தம்பதிக்கு ராஜி, சுரேஷ், ரகு, மேரி பிரான்சிஸ் 4 குழந்தைகள். இவர்களில் சுரேஷ் என்பவர் 1987-இல் உயிரிழந்துவிட்டார் . தங்கள் தாய் தந்தை காலமான பின்னர் ராஜி, ரகு, மேரி பிரான்சிஸ் ஆகியோர் பெரியவரானதும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்துடன் தற்போது பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகின்றனர்.

இந்த குடும்பத்துக்கு சொந்தமான 812 சதுர அடி வீட்டு மனை , எழும்பூர் காவல் நிலையத்துக்கு எதிரில் உள்ள பெருமாள் வீதியில் இருந்தது. இந்த இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக மேரிபிராண்ஸிஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள தனது அதிகார முகவர் ((power of attorney)) மூலம் மேரி பிரான்சிஸ் கடந்த ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த நில அபகரிப்பு குறித்து புகார் அளித்தார்.

இது தொடர்பாக மத்திய குற்ற பிரிவின் நில அபகரிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திமுக பிரமுகர் ரபி என்பவர் தனது வீட்டு பணிப்பெண் ரோஸி , ரோஸியின் மகள் ஜூலி, இம்ரான் , சம்பத்ராஜ் ஆகியோர் உடந்தையுடன் இந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து இருப்பது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் உருவாக்கிய போலி ஆவணங்களில் ஆதார் அட்டை தான் இவர்களை காண்பித்துக் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். மேரி பிரான்சிஸின் சகோதரரான சுரேஷ் 1987 -இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவி தான் ரோஸி என போலி ஆவணம் தயாரித்துள்ளனர். அதாவது சுரேஷ் உயிரிழந்து 31 ஆண்டுகள் கழித்து 2018 -ஆம் ஆண்டு, ரோஸியின் ஆதார் அட்டையில் கணவர் பெயர் சுரேஷ் என மாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆதார் அட்டையின் பெயர் மாற்றத்திற்கு முன்பு ரோஸியின் உண்மையான கணவர் பெயர் ஜான் என்பதையும், அவர்களுக்குப் பிறந்த ஜூலி என்ற பெண்ணை சுரேஷிற்கு பிறந்த மகள் போன்று அந்த ஆதார் அட்டையை வைத்து போலியான தகவலை கொடுத்து அசலான பிறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் வாங்கியுள்ளனர்.

அதன் மூலம் இந்த சொத்துக்களின் வாரிசு இவர்கள்தான் என போலி ஆவணங்களை உருவாக்கி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து அந்த இடத்தை ரபி விலைக்கு வாங்குவது போல் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த இடத்தின் ஆவணங்களை வங்கியில் கொடுத்து கடன் வாங்கிய ரபி, அதில் மூன்று மாடி கொண்ட வீட்டையும் தற்போது கட்டி முடித்துள்ளார். அந்த வீடுகளுக்கு விளம்பரம் கொடுத்து விற்பனைக்கு முன் பணத்தையும் வாங்கி மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகின்றது

போலி ஆவணங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்களின் சென்னையில் உள்ள சொத்துக்களை அபகரித்த இந்த மோசடி தொடர்பாக ரபி , ரோஸி , ஜூலி, இம்ரான் ஆகிய நான்கு பேரை சென்னை நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரபி அரசியல் பிரமுகர் என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் பகுதியில் வெளி நாடுகளில் வசிப்போரின் சொத்துக்களை அடையாளம் கண்டு இது போன்ற விஞ்ஞான மோசடிகளை அரங்கேற்றி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies