முகப்பு
குழந்தையின் கழுத்தில் கத்தி.. தாயை சீரழித்த கொடூரர்கள்.. 4 மணி நேரம் நீடித்த கொடுமை..! குலை நடுங்கச் செய்த கொடூரம்..
Feb 25, 2025 02:11 AM
632
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த காதல் திருமணம் செய்த தம்பதியர் 6 மாத பச்சிளம் கைக்குழந்தையுடன் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.
இருவரும் பெற்றோரை எதிர்த்து காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தப்பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்த இளம் தம்பதிக்கு 6 மாத குழந்தை இருக்கும் நிலையில் இளைஞர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார். இங்கு உள்ள வீட்டில் அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 19 ந்தேதி இரவு வேளையில் கதவை சாத்தி வைத்து வீட்டில் அமர்ந்திருந்த நிலையில் போதையில் இருந்த இரு இளைஞர்கள் திடீரென்று வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அந்தப்பெண் சத்தம் போட முயலவே ஒருவன் அந்தப்பெண்ணை வாயை பொத்தி மடக்கிப்பிடித்துள்ளான்.
மற்றொருவன் அந்த பச்சிளம் குழந்தையை தூக்கிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைத்துள்ளான். தங்கள் இச்சைக்கு இணங்கவில்லை என்றால் அறுத்து போட்டுவிடுவோம் என்று கூறி கடுமையாக மிரட்டியதால் சத்தம் போட இயலாமல் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் இருந்தாலும் விடாமல் அந்த பெண்ணிடம் இரு அரக்கர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றதாகவும், பின்னர் நள்ளிரவு 1;30 மணி அளவில் அதே கொடூரர்கள் திரும்பி வந்து மீண்டும் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார் பாதிக்கப்பட்ட பெண்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியூரில் இருந்த தனது கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்ததாகவும், 3 தினங்கள் கழித்து தனது கணவர் ஊர் திரும்பியதால், அவருடன் வந்து புகார் அளித்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட இரு ஆசாமிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காமுக அரக்கர்களின் அங்க அடையாளங்கள் மூலம் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய மாரிச்செல்வம் மற்றும் மாரியப்பன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடிவந்தனர். அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் சுற்றிவளைத்த நிலையில் தப்பி ஓடிய மாரியப்பனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவனை தூக்கிச்சென்று போலீசார் மாவுக்கட்டு போட்டுவிட்டனர்
அந்த பெண்ணுக்கு இரு முறை ரணவேதனை கொடுத்த கொடூரன் மாரிச்செல்வம் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர். இதில் மாரி செல்வத்தின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் தவழ்ந்தான். அவனை போலீசார் தூக்கிச்சென்று சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
வீட்டில் தனது குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தாய்மார்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. தனியாக இருக்கும் பெண்கள் கதவை பூட்டிக் கொண்டு இருக்கவும், இரவு நேரத்தில் அறிமுகமில்லா நபர்கள் கதவை தட்டினால் திறக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu