முகப்பு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த பெண்
Jun 25, 2025 04:40 PM
82
பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக 7 பேரை கைது செய்த போலீசார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். PACL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வந்த பச்சையம்மாளின் கீழ் 70 பேர் சப் ஏஜெண்டாகப் பணிபுரிந்தனர்.
2017-ஆண்டு வரை பொதுமக்களிடம் வசூலித்த பணம் 4 கோடி ரூபாய் வரை பச்சையம்மாள் PACL நிறுவனத்தில் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தலைமறைவானதால், பணத்தை இழந்தவர்கள் பச்சையம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த செவ்வாய்க் கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பச்சையம்மாள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததால் 70 சதவீத தீக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
அவரது கணவர் மலைச்சாமி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu