முகப்பு
“என் சொத்தே அவள் தான்..” சொத்து எழுதி வைத்ததால் காதலியுடன் திருமணம்..! இந்த டீல் நல்லா இருக்கே..!
Feb 22, 2025 04:27 PM
451
“என் சொத்தே அவள் தான்..” சொத்து எழுதி வைத்ததால் காதலியுடன் திருமணம்..! இந்த டீல் நல்லா இருக்கே..!
காதல் திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் நம்பிக்கையை பெற, மாப்பிள்ளை தனது சொத்தை , காதலியின் பெயருக்கு எழுதி வைத்த சம்பவம் சேலம் அடுத்த ஓமலூரில் அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டாரின் நம்பிக்கையை பெற தனது சொத்தை மணமகள் பெயரில் எழுதி வைத்த “தாராள பிரபு” விக்னேஷ் இவர் தான்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திமிரிகோட்டை பகுதியைச் சேர்ந்த சாருலதாவும், சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த விக்னேஷும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி உள்ளனர். இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் ஓமலூர் போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதானம் பேசும் போது பெண் வீட்டார் பையன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், இவனெல்லாம் தங்கள் வீட்டு பெண்ணை வைத்து எப்படி காப்பாற்றுவார் ?எனவும் பெண் வீட்டார் கேள்வி எழுப்பினர். எங்கள் வீட்டு பெண் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று எப்படி நம்பமுடியும், நாங்க நம்பிக்கை வைக்கனுமுன்னா, பெண் பெயரில் அவரது சொத்தை எழுதி வைக்க சொல்லுங்க என்று நிபந்தனை விதித்தனர்.
காதல் மயக்கத்தில் இருந்த விக்னேஷோ தனக்கு சொத்து முக்கியமில்லை காதலியுடன் வாழ்வது தான் முக்கியம் என்று, தனது தந்தையிடம் இருந்து தனக்கு வரவிருக்கின்ற சொத்தில் ஒரு பகுதியை தனது காதல் மனைவியின் பெயருக்கு எழுதி வைப்பதாக கையெழுத்து போட்டுக் கொடுக்க சம்மதித்தார்.
அதன்படி ஓமலூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் புது மாப்பிள்ளை விக்னேஷ், அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரின் ஒப்புதலுடன் 100 ரூபாய் பாண்டு பத்திரத்தில் கையொப்பம் மற்றும் கை நாட்டு பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்தனர். அதன்பின்பு இரு தரப்பினரும் அந்த காதல் திருமணத்தை அங்கீகரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்பெல்லாம் மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் எவ்வளவு சவரன் போடு வீங்க ? என்ற காலம் போய் மாப்பிள்ளையிடம் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த சம்பவத்தால் பெண் வீட்டார் உற்சாகம் அடை ந்துள்ளனர்.
இதில் சோகம் என்னவென்றால்... சாருலதாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று அளித்த புகாரை விசாரித்து காதல் ஜோடியை சேர்த்து வைத்த உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டது தான்..!
காதல் திருமணம் செய்த இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து , பஞ்சாயத்து பேசி சொத்தை எழுதி வைக்க சொன்னதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானதால் எஸ்.ஐ. பிரபாகரன் மீது இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu