RECENT NEWS

புதுக்கோட்டையில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக காவலர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக காவலர் பணியிடை நீக்கம்

Mar 15, 2025

புதுக்கோட்டையில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக காவலர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டையில் ரவுடிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக காவலர் பணியிடை நீக்கம்

Mar 15, 2025

BIG STORIES

அந்த ஓட்டலில் அப்படி.. என்ன சாப்பிட்டுருப்பாரு..? மாண்டவர் மீண்ட சம்பவம்.. ஓட்டல் பெயரை கேட்டவுடன் எழுந்தார்

Feb 12, 2025 01:51 PM

402

அந்த ஓட்டலில் அப்படி.. என்ன சாப்பிட்டுருப்பாரு..? மாண்டவர் மீண்ட சம்பவம்.. ஓட்டல் பெயரை கேட்டவுடன் எழுந்தார்

அந்த ஓட்டலில் அப்படி.. என்ன சாப்பிட்டுருப்பாரு..? மாண்டவர் மீண்ட சம்பவம்..

தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த 45 வயது நபரை, ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்துச் சென்ற போது , தான் தினமும் சாப்பிடும் ஓட்டல் பெயரை கேட்டதும் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாண்டவர் மீண்ட சம்பவம் அரங்கேறிய இடம் கர்நாடக மாநிலம்..! அங்குள்ள ஹாவேரி மாவட்டம், ஷிகானின் பங்காபுராவை சேர்ந்தவர் 45 வயதான பிஷ்டப்பா குடிமணி இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைகாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பிஷ்டப்பா குடிமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, மருத்துவர்கள் அறிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அழுது புலம்பினர்.

இத்தகவல் உறவினர்களுக்கும், கிராமத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எல்லாம் அடித்து ஊர் முழுக்க ஒட்டிவிட்டனர்.

பல மணி நேர பார்மாலிட்டி எல்லாம் முடிந்து பிஷ்டப்பா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

வாகனத்தில் மனைவி, இரு மகன்கள் அருகில் அமர்ந்து இருந்தனர். அப்போது அவரின் இளைய மகன், “அப்பா அங்கு பாருங்கள்.. நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது.. எழுந்திருங்கள் அப்பா..” என்று அழுதபடி கூறியுள்ளார்.

இதை கேட்ட பிஷ்டப்பா, ஹா... என்று கூறி மூச்சை இழுத்து விட்டதாக கூறப்படுகின்றது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஆம்புலன்சை நிறுத்தி, உடனடியாக ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் பிஷ்டப்பாவை மீண்டும் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்குள்ள மருத்துவரிடம் விஷயத்தை கூறினர். இரண்டு மணி நேரம் செயற்கை சுவாச கருவி பொருத்தும்படி, செவிலியரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், மேல் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்

அதே ஆம்புலன்சில், கிம்ஸ் மருத்துவமனைக்கு பிஷ்டப்பா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், உயிர் பிழைத்ததால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், பிஷ்டப்பா பிழைத்துக் கொண்ட தகவல் அறிந்ததும் உறவினர்கள் , தாங்கள் ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஆள் வைத்து கிழித்து அகற்றி வருகின்றனர்

வாட்ஸாப், எக்ஸ் சமூக வலைதளங்களிலும் அவரின் படத்தை பதிவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தவர்களும், மாணடதாக கூறப்பட்ட பிஷ்டப்பா மீண்டு விட்டதாக மறு பதிவு செய்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கனிமவளக் கற்களை கடத்தியதாக திமுக பிரமுகரின் மகன் மீது வழக்கு... இரு டிப்பர் லாரிகள் பறிமுதல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies