தமிழ்நாடு
முன்விரோதத்தில் இரு சமூக இளைஞர்களுக்கு இடையே தகராறு.. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு
Jan 23, 2025 11:45 AM
59
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே முன்விரோதத்தில் இரு தரப்பு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல்வாய் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன், அவரது நண்பர் விஜயகணபதி ஆகியோர் மீது கடந்த 16 ஆம் தேதி திருமால்பூரை சேர்ந்த பிரேம் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார்.
கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆறு பேரில் ஒருவர் விசிக பிரமுகர் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு சமூக இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமால்பூர் பகுதியில் மூன்று டிஎஸ்பிகள் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News