தமிழக அரசால் பா.ஜ.கவினர் எதிர்கொண்ட பிரச்னை குறித்து ஆராய சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டில் பா.ஜ.க குழு ஆய்வு

0 1052

தமிழக அரசால், பா.ஜ.க.வினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை பனையூரில் உள்ள மாநில தலைவர் அண்ணாமலை வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

அண்ணாமலை வீட்டின் முன்பு நடப்பட்ட பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

முன்னதாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டிருந்த பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் அடையாறு இல்லத்திலும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments