முகப்பு
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? - பொன்முடிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி
Jul 08, 2025 01:41 PM
39
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பொன்முடிக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று கூறிய நீதிபதி, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சர்களுக்கு வரவேண்டும் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu