சீனாவில் இலையுதிர் காலத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட ஒளித் திருவிழா

0 885

சீனாவில் இலையுதிர் காலத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட ஒளித் திருவிழா, லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

சீனாவில் இலையுதிர் காலத்தை கொண்டாட கடந்த மாதம் 29-ம் தேதி முதல் 8 நாட்கள் நாடு முழுவதும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சிச்சுவான் மாகாணம் ஜிகாங் நகரில் ஒளி திருவிழா நடைபெறுகிறது.

திருவிழா பகுதியில் டிராகன், பீனிக்ஸ் பறவை போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டு வண்ண விளக்குகளால் ஒளிரூட்டபட்டுள்ளன. தோரணங்கள் போல பல வகையான விளக்குகள் விழா மைதானத்தில் தொங்கவிடப்பட்டன.

லேசர் ஒளி காட்சிகளுடன் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments