நெல்லையில் கீழநத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கீழநத்தம் பஞ்சாயத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.
நேற்று மாலை இவர், தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் ராஜாமணியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களும், ராஜாமணியின் உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர்.
ராஜாமணி கொலை தொடர்பாக நெல்லை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments