காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை - பிரதமர் மோடி விமர்சனம்

0 954

காங்கிரஸ் என்றாலே கொள்ளையடிக்கும் கூடாரம், பொய்களின் சந்தை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி கால ஊழல்கள் மீது கடுமையான விமர்சனம் வைத்தார்.

ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸ் விவசாயிகளை கைவிட்டு விட்டதாகவும் காங்கிரஸ் அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

4 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் காலை வாரி விடும் கோஷ்டி பூசல்களுக்கே காங்கிரசுக்கு நேரம் சரியாக உள்ளது என்றும் அவர் சாடினார். ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் கடந்த 9 மாதங்களில் ஏழாவது முறையாக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments