அமெரிக்காவில், மின் நிலையத்திற்குள் புகுந்து இயந்திரக் கோளாறு ஏற்படுத்திய பாம்பு.. 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதி

0 1274

அமெரிக்காவில், ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் புகுந்து இயந்திர கோளாறு ஏற்படுத்திய பாம்பால், அம்மாகாண மக்கள் 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்தனர்.

இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல், மின் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு, மின்சார சர்க்யூட்களில் ஊர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியதால் 16 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, மின் நிலையங்கள் முன்பு குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments