"விமர்சனங்களை பற்றி இம்மி அளவும் கவலைப்படவில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1757

விமர்சனங்களை பற்றி தான் இம்மி அளவும் கவலைப்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு இன்று தொடங்குகிறது.

இதனையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரிடம், 2 ஆண்டுகால ஆட்சி குறித்தும், விமர்சனங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், விமர்சனங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, கெட்டதை புறந்தள்ளி விடுவதாக பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments