பாட்டியுடன் கோயிலுக்குச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி.. கதறி துடிக்கும் தாய்..!

0 2530

சென்னையில் பாட்டியுடன் கோயிலுக்குச் சென்ற 13 வயது சிறுவன் அலங்கார விளக்குக்காக போடப்பட்டிருந்த ஒயரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கவின் என்ற சிறுவன், 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் அருகேயுள்ள கருப்பு சாமி கோயிலில் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியைக் காண பாட்டியுடன் சென்றுள்ளார்.

கோயிலில் இருந்த பூசாரி சாமியாடிக் கொண்டு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, அருகில் அலங்கார விளக்கு அமைக்கப்பட்டிருந்த மரக்கட்டையை கவின் பிடித்துள்ளார். அப்போது அதன் வழியே கொண்டு செல்லப்பட்ட சேதமடைந்த ஒயரில் கை பட்டு, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

உரிய அனுமதியின்றி அங்கிருந்த மின் விநியோகப் பெட்டியிலிருந்து மின்சாரம் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments