சிறையிலிருந்து விடுதலையான 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

0 1274

சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகள் 660 பேருக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் 155 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவப் பூங்கா அமைப்பதற்கான பணியை முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், புத்தொழில் நிதித் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 33 நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு செய்வதற்கான ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments