ஹைதி தலைநகரில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து..!

0 2157

ஹைதி தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள சாலையோர சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பெஷன்-வில்லில் உள்ள பிரபலமான இந்த சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு நிலையத்திற்கு உடடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும், தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் நிரப்பி வர தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

தீ விபத்தால் சுமார் 900 பேர் தங்கள் கடைகளை இழந்துள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments