பிரான்ஸில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!

பிரான்சின் லியோன் நகரில் நேரிட்ட தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வால்க்ஸ்-என்-வெலினில் 7 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில், அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த 180-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், 3 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர்.
Comments