இறந்தவர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த 5பேர் கும்பல் கைது.!

0 3013

தென்காசி அருகே இறந்தவருக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்த 5பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை தாலுகா பண்பொழியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 20ந்தேதி  மறைந்த மீனாட்சிபுரம் கணபதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை ஒரு கும்பல் மோசடியாக பதிவு செய்ய முயன்றது.

சேகர் என்பவர் தனது ஆதார் அட்டை நகலில் பெயர் மாற்றம் செய்து கணபதி உயிரோடு இருப்பது போன்று பொய்யாக ஆவணங்களை தயாரித்து செல்லம் என்பவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

சார்பதிவாளர் முன்பு சேகர் கைரேகை வைக்கும் போது, ஆதாரில் இருக்கும்  உண்மையான பெயரான சேகர் முருகன் என்று காட்டியுள்ளது. இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரில்  5 பேரையும் கைது செய்து, மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments