ரத்து செய்யப்பட்ட 19 லட்சம் குடும்ப அட்டைகளை சரிபார்க்க தெலங்கானா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 2066
ரத்து செய்யப்பட்ட 19 லட்சம் குடும்ப அட்டைகளை சரிபார்க்க தெலங்கானா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானாவில் ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளையும் மீண்டும் சரிபார்க்கும்படி அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து 19 லட்சம் போலி குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளதாக தெலங்கானா அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், முறையான விசாரணையின்றி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டனர். ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளையும் மீண்டும் சரி பார்க்கும்படி தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments