தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
தமிழ்நாட்டில், மேலும் 4 மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா ஆகிய வீர விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, சிவானந்தபுரம், மூஞ்சூர்பட்டு, புலிமேடு, அரியூர் உள்ளிட்ட 25 இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தெற்கு தமறாக்கி கிராமத்திலும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
Comments