போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு மாநில நிதியாதாரத்தில் இருந்து பெருந்தொகை செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டில் 2110 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், மத்திய அரசின் பங்காக 584 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
Comments