தமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1557பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 1910பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 1557 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர்.சென்னையில், புதிதாக 469 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூர், கொரோனா இல்லாத மாவட்டமாக நீடிக்கிறது. அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை ராமநாதபுரம், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Comments