அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து பயம் - இ.பி.எஸ்
Jul 23, 2025
BIG STORIES
”வேர்க்கடலைக்காக ரேஞ்ச் ரோவர் காரா?” .. அரசின் புதிய அறிவிப்பால் தவிக்கும் கார் உரிமையாளர்கள்..
Jul 03, 2025 03:55 PM
206
”வேர்க்கடலைக்காக ரேஞ்ச் ரோவர் காரா?” .. அரசின் புதிய அறிவிப்பால் தவிக்கும் கார் உரிமையாளர்கள்..
டெல்லி அரசின் அதிரடி நடவடிக்கை, வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. தற்போது இது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களும் நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பழைய வாகனங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, பெட்ரோல் பம்புகளில் உள்ள கேமராக்களை பயன்படுத்துகின்றனர். அதாவது பம்புகளில் இருக்கும் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) கேமராக்களின் உதவியுடன் இந்த விதி செயல்படுத்தப்படுகிறது.
அரசின் இந்த நடவடிக்கை என்பது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கம் என்றாலும், இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பலரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
மாநில அரசு கொண்டுவந்த இந்த புதிய திட்டத்தால், டெல்லியைச் சேர்ந்த ரித்தேஷ் கந்தோத்ரா என்பவர், 8 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்திய, தனது சொகுசு SUV-யை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இவரின் ரேஞ்ச் ரோவர் டீசல் காரானது, கொரானா ஊரடங்கின் போது, இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது இரண்டு லட்சம் கி.மீ.க்கும் அதிகமான ஆயுட்காலம் மீதமுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதேபோல, காண்டோத்ரா என்பவரும், தனது பிரீமியம் கார் நன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் என்றும், ஓடோமீட்டரில் வெறும் 74,000 கி.மீ மட்டுமே ஓடியது என்று கூறியிருக்கிறார். டீசல் தடை காரணமாக, 2018 இல் 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தனது வாகனத்தை இப்போது மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
தற்போது இந்த வகை புதிய வாகனம் அதிக விலையுடன் வருகிறது என்றும் அவர் கவலை தெரிவித்திருக்கிறார். "இந்த புதிய கார்களை வாங்குவதற்கு 45% ஜிஎஸ்டி + செஸ் வரி செலுத்த வேண்டும். இது ஒரு பசுமைக் கொள்கை அல்ல. பொறுப்பான உரிமை மற்றும் பொது அறிவுக்கு இது ஒரு தண்டனை" அவர் காட்டமாக தெரிவித்திருக்கிறார்
இதுப்போன்று, பலரும் சமூக ஊடகங்களில் இந்த புதிய கொள்கையானது "நியாயமற்றது" என்று கூறி, கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் பழைய கார்களைத் தடை செய்யும் இந்த விதியில் உண்மையில் சில மாற்றங்கள் தேவை என கார் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பழைய கார்களுக்கு நல்ல பணம் கொடுப்பது அல்லது புதிய கார் வாங்க விரும்பும், பழைய கார் உரிமையாளர்களுக்கு வரிகள் குறைவாக வழங்குவது அல்லது வரிகள் இல்லாதது போன்ற ஏதாவது ஒன்றை அரசாங்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 1 முதல், 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள், நல்ல நிலைமையில் இருந்தாலும், அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிக்கப்படுவதாக காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, விதிகளை மீறும் கார்களை உடனடியாக அடையாளம் காண, டெல்லியில் உள்ள 350க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில் தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
CAQM படி, 41 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 18 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் என சுமார் 62 லட்சம் வாகனங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu