கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
கண்டெய்னர் லாரி செண்டர் மீடியனில் மோதி விபத்து
Jun 13, 2025
மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 257 பேர் பாதிப்பு
May 20, 2025 05:19 AM
212
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 257 பேர் பாதிப்பு
இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இது லேசான பாதிப்புதான், கவலைப்பட வேண்டாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜேஎன்-1 எனப்படும் ஓமிக்ரான் வைரஸின் புதிய திரிபின் நோய்த்தொற்று தற்போது, மனித எதிர்ப்பு சக்தியைத் தாண்டி வேகமாகப் பரவி வருகிறது.
இளம் வயதினரிடையே இந்த வைரஸ் தொற்று அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
முந்தைய கொரோனா தொற்றுகளைப் போலவே, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, வாந்தி, அதிக வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் கொண்டது.
சிலருக்கு தீவிர களைப்பையும், மூச்சுத்திணறலையும் ஏற்படுத்தக்கூடியது என்றும், பெரும்பாலும் லேசான பாதிப்பே இருப்பதாகவும், அசாதாரண தீவிரத்தன்மை அல்லது உயிரிழப்பு அபாயம் இல்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu