கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
இருட்டுக்குள் மறைந்திருந்து கொடூரமாய் தாக்கும் இருவர்.. தலையை நசுக்கி கொலை..! தனியாக போறீங்களா உஷார்..!
Apr 30, 2025 01:11 AM
678
இருட்டுக்குள் மறைந்திருந்து கொடூரமாய் தாக்கும் இருவர்.. தலையை நசுக்கி கொலை..! தனியாக போறீங்களா உஷார்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - கன்னியப்பிள்ளப்பட்டி சாலையில் இருட்டுக்குள் மறைந்திருந்த இருவர், தனியாக சென்றவரின் தலையில் கல்லை போட்டு நசுக்கிக்கொன்றதாக போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன் . தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி பார்த்த போது, ஆண்டிபட்டியில் இருந்து கன்னியப்பிள்ளப்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் கோபால்சாமி கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலையில் கல்லை போட்டு சிறு பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளி முருகன் இறந்து கிடந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அருகே அரிவாள் ஒன்றும், ரத்த தோய்ந்த நிலையில் கருங்கல் ஒன்றும் கிடந்தது. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் அந்த இருசக்கர வாகனம், பவித்ரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அவர் காயத்துடன் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. திங்கட்கிழமை இரவில் பைக்கில் வந்த போது இருட்டுக்குள் இருந்து திடீரென்று வந்து வழிமறித்த இரு மர்ம நபர்கள் தன்னை அரிவாளால் தாக்கிவிட்டு தனது செல்போனையும் இருசக்கர வாகனத்தையும் பறித்து சென்றதாக பவித்ரன் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இறந்த கூலி தொழிலாளியின் உடல் மற்றும் எரிந்த நிலையில் இருந்த இருசக்கர வாகனத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். வழிப்பறி கொள்ளையர்களின் கைவரிசையா ? அல்லது போதை ஆசாமிகளின் வெறிச்செயலா ? என்று இரு வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார். தொழிலாளி முருகன் எதற்காக கொல்லப்பட்டார் ? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் இரவு நேரங்களில் அந்தப்பகுதியில் தனியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu