RECENT NEWS

பழனி முருகன் கோவிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்

முகப்பு

மழைநீரில் பாய்ந்த மின்சாரத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனை, தனது உயிரை பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்

Apr 19, 2025 12:59 PM

367

மின்சாரத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுவனை, தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்

சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் பாய்ந்த மின்சாரத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஜேடன் ராயன் என்ற சிறுவனை, கண்ணன் என்ற இளைஞர் தனது உயிரை பணயம் வைத்து துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தண்ணீரில் இறங்கினால் தனக்கும் ஷாக் அடிக்கும் என்பதை உணர்ந்த கண்ணன், நடைபாதையில் இருந்தவாறு சிறுவனின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.

கண்ணன் சரியான நேரத்தில் தனது மகனைக் காப்பாற்றாமல் போயிருந்தால் அவரை நாங்கள் பார்த்திருக்கவே முடியாது என ஜேடன் ராயனின் தந்தை ராபர்ட் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாகவே அப்பகுதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளதாகவும் அதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கண்ணன் பணியாற்றும் அலுவலகத்தில் உரிமையாளர்களும் ஊழியர்களும் கேக் வெட்டி கண்ணனுக்கு ஊட்டி, அவரது செயலைப் பாராட்டியுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"ஒழுங்கா இல்லைனா வேற மாதிரி ஆகிரும்" எஸ்.பியின் மிரட்டலால் அதிர்ச்சி.. "உங்க அராஜகம்..அடிச்சு கொல்லுவீங்க..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies