RECENT NEWS

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

முகப்பு

"என் புருஷன கொன்னுபுட்டாங்க" வனத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு மர்மம் விலகுமா?

Apr 07, 2025 05:32 AM

143

"என் புருஷன கொன்னுபுட்டாங்க" வனத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு மர்மம் விலகுமா?

"என் புருஷன கொன்னுபுட்டாங்க" வனத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு மர்மம் விலகுமா?

வனத்துறையினரின் பிடியில் இருந்து தப்பி சென்ற நபர் நடுகாட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்... வனத்துறையினர் சுட்டு கொன்று விட்டதாக குடும்பத்தினர் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

பெற்ற மகனை ஆசையாக அழைத்த அந்த தாயின் குரலில், வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம் அப்பிகிடந்தது.

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய மகனை, நடு காட்டில் சூம்பி போன சடலமாக பார்த்தால் எந்த தாயால் தாங்கி கொள்ள முடியும்?

ஒட்டுமொத்த ஆத்திரத்தையும் சுடு வார்தைகளாய் கொட்டி தீர்த்தார் அந்த தாய்.

யார் அவர்? நடந்தது கொலையா அல்லது தற்கொலையா? நடுகாட்டில் என்ன நடந்திருக்கும்? போன்ற கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள, நாம் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதிக்கு செல்ல வேண்டும்.

தருமபுரி மாவட்டம், ஏமனூர் காப்புக்காடு கோடுபாவி பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஆண் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் வெட்டியெடுகப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த வனத்துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து யானையை வேட்டையடிய கும்பலை தேடி வந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில், ஏமனூர் காவிரியாற்றின் மறுகரையில் உள்ள கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவரை கைது செய்தனர்.

செந்திலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவசாயம் செய்து வந்த அவர், தந்தத்துக்காக யானையை வேட்டையாடியதாக சொல்லப்பட்டது.

இந்த சூழலில் கடந்த மாதம் 18 ஆம் தேதி, செந்திலை வனத்துறையின் கைவிலங்கோடு, யானை கொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது செந்தில் வனத்துறையினரை ஏமாற்றி விட்டு தப்பி சென்றதாக சொல்லப்பட்டது.

தலைமறைவான செந்திலை பிடிக்க, வனத்துறையினர் 4 தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர். அதே நேரம் செந்திலோடு சேர்ந்து யானையை வேட்டையாடியதாக, அவரது நண்பர்கள் மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

செந்தில் தப்பி ஓடி 10 நாட்களுக்கு மேலாகியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் கணவனை கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்திருந்தார்.

மனு கொடுத்த பிறகும் செந்திலை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இந்த சூழலில் தான், வெள்ளிக்கிழமை அன்று கொங்கரப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில், செந்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு, அழுகிய நிலையில் இருந்த சடலத்தின் மீது, ஒரு நாட்டு துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது.

செந்திலுக்கு என்ன ஆனது? அவர் எப்படி இறந்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அவரின் குடும்பத்தினர் வனத்துறையினர் தான் செந்திலை திட்டமிட்டு காட்டுக்குள் அழைத்து சென்று சுட்டு கொன்று விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

செந்திலின் குடும்பத்தினர் முன் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு, ஆதாரமாக சில காரணங்களையும் அவர்கள் அடுக்கியிருக்கிறார்கள்.

முதலாவது, செந்தில் கையில் விலங்கோடு தப்பி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், சடலத்தின் அருகே கைவிலங்கு எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை.

இரண்டாவது, ஏற்கனவே செந்திலுக்கும் வனத்துறையினருக்கும், மலையடிவாரத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக, முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த பகையை மனதில் வைத்துக் கொண்டு செந்திலை வனத்துறையினர் 2 மாதங்களுக்கு முன்பு பிடித்து சென்றதாக கூறுகிறார் அவரது மனைவி.

மூன்றாவது, செந்தில் சடலமாக மீட்கப்பட்ட இடம், அவரது ஊரில் இருந்து 10 கிலோ மீட்டர் துரத்தில் தான் உள்ளது. 4 தனிப்படை அமைத்து வனத்துறையினர் தீவிரமாக தேடியும், 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தலைமறைவாக இருந்த செந்திலை அவர்களால் எப்படி கண்டு பிடிக்க முடியாமல் போனது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதோடு சடலத்தின் மீதிருந்த துப்பாக்கி செந்திலுக்கு சொந்தமானதில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தந்ததுக்காக யானைகளை வேட்டையாடும் மாஃபியா கும்பல், உண்மை வெளிவரக்கூடாது என்று செந்திலை கொன்று விட்டனரா, அல்லது வேறு எதேனும் கரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

காட்டுக்குள் உண்மையில் செந்திலுக்கு என்ன நடந்தது என்றும், அவரின் குடும்பத்தினர் எழுப்பியிருக்கும் சந்தேக கேள்விகளுக்கும் முழுமையான விசாரணைக்கு பிறகே விடை தெரியவரும்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies