RECENT NEWS

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

முகமூடிக் கும்பலால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

Apr 27, 2025

முகப்பு

அவ நெனப்பாவே இருக்கு.. அவன தூக்குனா சரியாகிடும்.. காரை மோதி கொலை சம்பவம்..! போலீஸ் விசாரணையில் திடுக்

Apr 01, 2025 12:53 AM

526

அவ நெனப்பாவே இருக்கு.. அவன தூக்குனா சரியாகிடும்.. காரை மோதி கொலை சம்பவம்..! போலீஸ் விசாரணையில் திடுக்

அவ நெனப்பாவே இருக்கு.. அவன தூக்குனா சரியாகிடும்.. காரை மோதி கொலை சம்பவம்..!

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேலாளர் மீது காரை மோதி கொலை செய்ய முயன்ற நிலையில், தாவி குதித்து உயிர் தப்பிய அவரை, இருவர் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அடுத்த காப்புலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிபாண்டி. இவர் கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது இரு சக்கரவாகனத்தில் வீட்டில் இருந்து கடம்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த டாடா இண்டிகா கார் ஒன்று சங்கிலிப்பாண்டி மீது பயங்கரமாக மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தாவிக்குதித்து மண் பள்ளத்திற்குள் விழுந்ததால் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மீது மோதிய காருக்குள் இருந்து 2 பேர் இறங்கி ஓடி வந்துள்ளனர். தூக்கி விடத்தான் செல்கிறார்கள் என்று எண்ணி இருந்த நிலையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால், சங்கிலிப்பாண்டியை அவர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட்டியதாக கூறப்படுகின்றது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதனை பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கயத்தார் போலீசார், சங்கிலிப்பாண்டியின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த போலீசார் சங்கிலிப்பாண்டியின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் சண்முகராஜா என்பரை பிடித்து விசாரித்த போது கொலைக்காண காரணம் வெளிச்சத்திற்கு வந்தது.

சங்கிலிப்பாண்டி, சண்முகராஜாவின் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி நெருங்கிப்பழகி வந்ததாக கூறப்படுகின்றது. இவர்களின் திருமணம் கடந்த காதல் கணவர் சண்முகராஜாவுக்கு தெரியவந்ததும், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. மனைவியின் உயிரிழப்பிற்கு பின்னர் தன்னையும் குடும்பத்தையும் கவனிக்க ஆள் இல்லாமல், நேரத்திற்கு சாப்பிட இயலாமல் , மனைவியின் ஞாபகமாகவே சண்முகராஜா இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் மனைவியுடன் நெருங்கி பழகி அவரது சாவுக்கு காரணமான சங்கிலிப்பாண்டியோ, தனக்கு எதுவும் தெரியாதது போல உற்சாகமாக பைக்கில் வேலைக்கு சென்று வருவதை கண்டு சண்முகராஜா காண்டாகி உள்ளார். இதையடுத்து மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான சங்கிலிப்பாண்டியை கார் ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து நடந்தது போல ஜோடிக்க தனது கூட்டாளியுடன் சேர்ந்து சண்முகராஜா திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டும் , உயிருக்கு ஆபத்தில்லாமல் சங்கிலிப்பாண்டி தப்பியதால் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்முகராஜா கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுனர் மகராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies