BIG STORIES
அமுலில் நெளிந்த புழுக்கள்.. 20 லாரி பால் பொருட்கள்.. கெட்டுப்போனதால் அதிர்ச்சி..! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு..
Mar 29, 2025 02:36 AM
472
அமுலில் நெளிந்த புழுக்கள்.. 20 லாரி பால் பொருட்கள்.. கெட்டுப்போனதால் அதிர்ச்சி..!
சென்னையில் உள்ள குடோனிற்கு குஜராத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட அமுல் நிறுவன பொருட்களை 10 நாட்களாக பதப்படுத்த தவறியதால் அதில் இருந்து புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர்கள், குடோன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்கிச்சாப்பிடும் அமுல் ஐஸ்கிரீம், உள்ளிட்ட பால் பொருட்களை ஏற்றி வந்த லாரிகளில் உயிரோடு புழுக்கள் நெளிந்த காட்சிகள் தான் இவை..!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அலமாதி சாலையில் அமுல் பால் பவுடர் நிறுவனத்தின் ஒப்பந்ததாரருக்கு சொந்தமாக குளிர்சாதன வசதி கொண்ட சரக்கு கிடக்கு வளாகம் உள்ளது.
குஜராத்தில் உள்ள அமுல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் அமுல் பால் பவுடர் , குளிர்பானங்கள் , நெய் , இனிப்பு வகைகள் ஆகியவை அட்டை பெட்டிகளில் அடைத்து அங்கிருந்து லாரிகள் மூலம் இங்கு கொண்டுவரப்படும். குளிரூட்டும் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு முகவர்கள் மூலம் விற்பனைக்காக இந்த குடோனில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள அமுல் நிறுவன பால் பொருட்கள் கிடங்கில் போதிய இடம் இல்லாததால் அப்படியே லாரிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பால் உணவு பொருட்களை சரியாக கையாளாமல் திறந்தவெளியில் சுத்தி அடிக்கும் வெயிலில் லாரிகள் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது.
வெப்பத்தின் காரணமாக அட்டைப் பெட்டிகளில் இருந்த அமுட்டின் அட்டைப்பெட்டியில் உருகிய பால் பொருட்கள் பல உருகி மற்ற அட்டை பெட்டிகளுக்கு பரவியதோடு, வலுவிழுந்த அட்டைப்பெட்டிகள் பல நசுங்கியதாகவும் கூறப்படுகின்றது
இதனால் பால் பவுடர்கள் உணவுப்பொருட்களில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசியதோடு புழுக்கள் உற்பத்தியாகி தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர்கள் உடனடியாக சேதம் அடைந்த உணவுப் பொருட்களை லாரிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு அமுல் நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்து பதப்படுத்தும் நிறுவன ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்தார். குடோனுக்குள் போதிய இடமில்லை என்பதால் லாரிகளில் இருந்து பொருட்களை குடோனுக்குள் கொண்டு செல்ல இயலவில்லை என்று ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.
ஓட்டுனர்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் அங்கு கெட்டு போன பால் பொருட்களை ஆய்வு செய்து அப்புறப்படுத்த வர வேண்டிய உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரி கடைசிவரை அங்கு வரவே இல்லை என்று கூறப்படுகின்றது.
குழந்தைகள் அதிகம் சாப்பிடும் உணவு பொருட்கள் பதப்படுத்தப்படும் இந்த குடோனில் விரிவாக ஆய்வு செய்து கெட்டுபோன பால் பொருட்களை உடனடியாக கைப்பற்றி அழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu