முகப்பு
கல்லூரி மாணவியை மதம் மாற்றிவிட்டு துபாய் ஓடிய லவ்வர் பாய்..! விமான நிலையத்தில் கைது..!
Mar 09, 2025 01:53 AM
684
கல்லூரி மாணவியை மதம் மாற்றிவிட்டு துபாய் ஓடிய லவ்வர் பாய்..! விமான நிலையத்தில் கைது..!
சென்னையில் கல்லூரி மாணவியை காதலித்து மதம் மாற்றி ஏமாற்றி விட்டு, தங்கள் மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு துபாய் சென்ற இளைஞரை 7 வருடம் கழித்து மதமாற்ற தடைச் சட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தபோது, உடன் படித்து வந்த கடலூர் மாவட்டம், லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்ற மாணவருடன் பழகி உள்ளார். இவர்களது பழக்கம் காதலாக மாறி உள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி முகமது அந்த மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
கல்லூரி முடிந்து இளம்பெண் சென்னையில் உள்ள கால்டாக்ஸி நிறுவனத்தில் வேலை சேர்ந்துள்ளார். முகமதுவும் அந்த பெண்ணை தேடி சென்னை வந்து காதலை நீட்டித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் பல முறை நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முகமது, தான் துபாய்க்கு சென்று வேலை செய்வதாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார்.
துபாய் சென்றவுடன் இங்கு அவரது வீட்டார் முகமதுவுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இளம்பெண் , முகமதுவின் தாயாரிடம் சென்று கேட்டபோது, முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் எனக்கூறி உள்ளார்.
கட்டாயப்படுத்தி தங்கள் புனித நூலைப் படிக்க வைத்ததோடு, புர்கா அணிந்து பணிக்கு செல்ல கூறியுள்ளார். இதையெல்லாம் செய்த அந்த பெண்ணை ஒரு கட்டத்தில் நோன்பு இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துபாயில் தனது மகன் நன்றாக சம்பாதிப்பதால், பெண் வீட்டு தரப்பில் திருமணத்துக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகின்றது. காதலனுக்காக மதம் மாறிய அந்த இளம் பெண் கடும் ஏமாற்றம் அடைந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் விரிவான புகார் அளித்தார். புகாரின் பேரில் வடபழனி போலீசார் முகமது மீது மதமாற்ற தடைச் சட்டம், நம்பிக்கை மோசடி , பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முகமதுவை விசாரணைக்கு அழைத்தனர். அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் முகமது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்த நிலையில் போலீசாரின் கைகளில் சிக்காமல் தண்ணி காட்டி வந்த அந்த லவ்வர் பாய்க்கு எதிராக "லுக் அவுட் நோட்டீஸ்" வழங்கினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முகமது துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது, "லுக் அவுட் நோட்டீஸ்" காரணமாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ,அவரை பிடித்து வடபழனி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையம் சென்று முகம்மதுவை கைது செய்த வடபழனி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu