முகப்பு
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலமானது, சாம்பல் புதனுடன் துவங்கியது
Mar 05, 2025 06:15 AM
36
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலமானது, சாம்பல் புதனுடன் துவங்கியது
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலமானது, சாம்பல் புதனுடன் துவங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
40 நாட்கள் தவக்காலம் வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி))
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவைக்குறி அடையாளம் இடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலிக்கு பின்னர், அருள் பணியாளர்கள் சிலுவை அடையாளமாக திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசினர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சாம்பலில் சிலுவை குறி இட்டுக்கொண்டு தவக்காலத்தை தொடங்கினர்.
இதே போல திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கேத்ரீனம்மாள் தேவாலயத்தில், நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு தவக்காலத்தை தொடங்கினர்.
புதுச்சேரி, உழவர்கரைபகுதியில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தவக்காலத்தை தொடங்கினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu