BIG STORIES
திருமணமான 16 வது நாள் மாசாவில் விஷம் கலந்து மாப்பிள்ளை கதையை முடிக்க சதி..! மனைவியின் துரோக பின்னணி
Mar 02, 2025 01:41 AM
630
திருமணமான 16 வது நாள் மாசாவில் விஷம் கலந்து மாப்பிள்ளை கதையை முடிக்க சதி..!
கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம் பட்டி அருகே திருமணமான 16 வது நாளில் மாப்பிள்ளைக்கு மாசாவில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றதாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான கலையரசன் . இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இரு வீட்டார் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முதல் நாளில் ஷாலினி திடீரென விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்பொழுது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் விசாரித்த போது குடும்பத்த தகராறு எனக் கூறி திருமணத்தை நடத்தி உள்ளனர். 26 ஆம் தேதி திட்டமிட்டபடியே திருமணம் முடிந்து முதலிரவுக்கு பெரியோர்கள் ஏற்பாடு செய்த நிலையில் ஷாலினி இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என கலையரசனிடம் கூறி உள்ளார்.
கலையரசன் என்ன நடந்தது என்று கேட்டபோது நான் எனது வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி இருக்கும் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இது வீட்டிற்கு தெரிந்து விட்டதால் சித்தப்பா, மாமா உள்ளிட்டோர் சேர்ந்து திருமணம் செய்து வைத்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் சில நாட்களில் தனது மனைவி ஷாலினி மனதை மாற்றி விடலாம் என்று நம்பி கலையரசன், பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் இதற்கு எதற்குமே ஷாலினி ஒத்து வராத காரணத்தினால் கலையரசன் கடந்த பிப்ரவரி 12ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு ஷாலினியை அனுப்பிவிட்டார்.
கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மனைவி ஷாலினியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பிறகும் ஷாலினி சந்தோஷமாக இல்லாத நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு கலையரசன் இரவு பணிக்கு சென்று விட்டு 20ஆம் தேதி காலை பணி முடிந்து வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவியிடம் டீ போட்டு கேட்டுள்ளார். அதற்கு ஷாலினி டீ போட பால் இல்லை மாசா ஜூஸ் இருக்கிறது குடியுங்கள் என பிரிட்ஜில் இருந்து எடுத்து வந்து கொடுத்துவிட்டார்.
அதனை குடித்த கலையரசன் பின்னர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். சிறிது நேரத்தில் ஷாலினி எழுப்பி நான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளேன் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். கலையரசனை முதலில் குள்ளஞ்சாவடி மருத்துவமனைக்கும் தொடர்ந்து கடலூர், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் கொண்டு சென்று தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் கலையரசனிடம் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் வாக்குமூலமும் பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கலையரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் சம்பவத்தில் தொடர்புடைய யாருமே கைது செய்யப்படவில்லை என்பதால் தற்பொழுது கலையரசன் தம்பி சூர்யா மற்றும் அவரது தாய் தந்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனு அளித்தனர். திருமணமான 16 வது நாளே குளிர்பானத்தில் கணவனுக்கு மனைவி விஷம் வைத்துக் கொடுத்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu