தமிழ்நாடு
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Jan 23, 2025 08:29 AM
54
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரும்பின் தொன்மை என்ற நூலை வெளியிட்ட முதலமைச்சர், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளதாக கூறினார்.
பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லிவந்தவை இலக்கிய புனைவுகளோ, அரசியலுக்காக சொன்னவையோ அல்ல, அனைத்தும் வரலாற்று ஆவணங்கள் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News