முகப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
Jul 23, 2025 07:52 AM
176
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக முதல் குற்றவாளியாக கூறப்படும் காவல் முன்னாள் ஆய்வாளர் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு போலீசார் விசாரணையில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் அடித்துக்கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கில் வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், அரசுத்தரப்பு சாட்சியாகி, அனைத்து காவலர்கள் செய்த செயல்களை சொல்ல விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புவதாகவும் ஸ்ரீதர் மனுவில் கூறியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu