ஜி20 மாநாட்டில் பங்கேற்க நாளை டெல்லி வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

0 1046

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை டெல்லி வருகிறார்.நாளை மறுநாள் அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன், அதிபர் ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் கலந்துக் கொள்ள வியாழக்கிழமை டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியுடன் அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளதாக ஜேக் சுலிவன் உறுதி செய்துள்ளார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜோ பைடனின் வருகையில் மாற்றம் ஏற்படுமா என்று கருதப்பட்டது. ஆனால் ஜோ பைடனுக்கு கோவிட் பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு வந்ததால்அவர் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments