வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பியவர் கொலை... 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது

0 2065

திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகி விட்டு காரில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஓணான் செந்தில் என்பவர் 2016-ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இவர் திருவாருர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகி விட்டு தனது 2 வழக்கறிஞர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

நாகலூர் என்ற இடத்தில் அவர்களது கார் மீது மற்றொரு கார் மோதியுள்ளது. அதில் இருந்து இறங்கிய 6 பேர், ஓணான் செந்திலை சரமாரியாக வெட்டியதுடன், உடன் இருந்த வழக்கறிஞர் அகிலன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஓணான் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலை மற்றும் கை, கால்களில் காயத்துடன் வழக்கறிஞர் அகிலன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக குடவாசல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

((நாகலூர், திருவாரூர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments