மேடையில் பேசிக் கொண்டிருந்த ஆட்சியரிடம் திடீரென புகார் கூறிய பெண்கள்.. உடனடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்..!!

0 1354

வேலூர் மாவட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம், திடீரென எழுந்து தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லையென பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தெள்ளையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, சில பெண்கள் திடீரென எழுந்து தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து புகார் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகளை செய்துத்தர உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், இதுபோன்று புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments