''பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டோம்..'' - ரஷ்ய ராணுவத் தளபதி..!

0 1238

உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது.

பாக்முத் பகுதியில் ரஷ்ய தேசியக் கொடியை வீரர்கள் ஏற்றுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவின் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. போரின் முக்கிய மையமான பாக்முத் நகரில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரேவதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments