மனைவியை வழிமறித்து கொடூரமாக கொன்ற கணவன் போலீசில் சரண்..!

0 2267

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியரை வழிமறித்து கத்தியால் குத்தியும் பெட்ரோல் ஊற்றி எரித்தும் கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

கோவில்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

கணவர் பாலசுப்பிரமணியன் என்ற அக்பர் இப்ராஹிமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 குழந்தைகளோடு அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் பணி முடித்து வீட்டிற்கு நடந்து சென்ற அய்யம்மாளை வழிமறித்த அக்பர் இப்ராஹிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அய்யம்மாளை குத்திய அவர், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பி ஓடிய அக்பர் இப்ராஹிம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments