பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

0 1149

பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை குடித்ததால் நாமக்கல் அருகே 3 வயது குழந்தை உயிரிழந்தார்.

கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த கேசவன், தனது இருசக்கர வாகனத்திற்கு பெயின்ட் அடிப்பதற்காக, பெயின்ட் மற்றும் தின்னரை வாங்கி வைத்திருந்தார்.

பார்ப்பதற்கு, குடிநீர் பாட்டில் போல காட்சியளித்ததால், கேசவனின் அண்ணன் மகள்கள், 5 வயது மகள் மவுலிஸ்ரீ, 3 வயது மகள் தேஜீஸ்ரீ ஆகியோர் எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில், இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், மூன்று வயது தேஜீஸ்ரீ மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments