அட்சய திருதியையொட்டி நகைக் கடைகளில் குவியும் மக்கள்..

0 2200

அட்சய திருதியை முன்னிட்டு, நகைகள் வாங்க சென்னையில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சித்திரை மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் திருதியை தினத்தன்று எந்த பொருளை வாங்கினாலும், ஆண்டு முழுவதும் அந்தப் பொருள் அதிகமாக சேரும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்றும், நாளையும் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகைக்கடைகளில் நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப் பட்டுள்ளன. இன்றைக்கு, ஒரு கிராம் தங்கம், 5 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகம் என்றாலும், இந்நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக, கடைகளுக்கு வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments