தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் அமல்.!

தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் இரண்டு மாதங்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப் படுகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இன்று முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீன்பிடி தடைகாலம் துவங்கியதால் மீன்களின் விலை இரு மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது.
Comments